சென்னை : முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் அமாவாசை நாளாகும். ஜோதிட சாஸ்திரப்படி, தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் இணைந்து வரும் நாள் அமாவாசையாகும். மாதம்தோறும் வரும் அமாவாசைகளின் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
ஆடி அமாவாசை என்பது பித்ரு லோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்களை நமக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக புறப்படும் நாளாகும். இந்த நாளில் அவர்களை நினைத்து கொடுக்கப்படும் தர்ப்பணம் பித்ருலோகத்தில் அவர்கள் துன்பப்படாமல் நற்கதி அடைய செய்வதுடன், அதன் பலன் நம்முடைய பிள்ளைகளை போய் சேரும். நாம் கொடுக்கும் தர்ப்பணம் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம், நாம் செய்த பாவங்களை போக்கு வீட்டில் உள்ள துன்பங்களை போக்கக் கூடியதாகும்.
2023 ம் ஆண்டில் மிகவும் விசேஷமாக ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. அதாவது ஆடி முதல் நாளான ஜூலை 17 ம் தேதியும், ஆடி 31 ம் தேதியான ஆகஸ்ட் 16 ம் தேதியும் அமாவாசை திதி வருகிறது. இந்த இரண்டு நாட்களுமே முன்னோர்களை வழிபட்டு திதி கொடுக்க ஏற்ற நாளாகும்.
ஆடி அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து நீர்நிலைகளில் நீராடி, பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்கள் முழுவதுமாக உபவாசம் இருக்க வேண்டும். பகலில் முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து அவர்களுக்கு படைத்த பிறகு, காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, நாம் உணவு உண்ண வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று நம்முடைய முன்னோர்களை நினைத்து நெய் தீபம் ஏற்றுவது சிறப்பானதாகும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைக்கலாம். அதுவும் முடியாதவர்கள் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கலாம். யாராவது இரண்டு பேருக்கானது அன்னதானம் வழங்குவது சிறப்பானது.
அம்மா அல்லது அப்பா அல்லது இருவரும் இல்லாத ஆண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த கணவன் அமாவாசை விரதம் இருக்கலாம். சுமங்கலி பெண்கள் அமாவாசை விரதம் இருக்கவோ, தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது. இறந்த தனது பெற்றோர்களை நினைத்து வழிபட்டு, யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்கலாமே தவிர முறையாக அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.
தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?
பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)
பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
{{comments.comment}}