ஆடி அமாவாசை : துன்பம் போக்கும் முன்னோர் வழிபாடு

Jul 17, 2023,09:03 AM IST

சென்னை : முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கு மிகவும் உகந்த நாள் அமாவாசை நாளாகும். ஜோதிட சாஸ்திரப்படி, தந்தைக்குரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் இணைந்து வரும் நாள் அமாவாசையாகும். மாதம்தோறும் வரும் அமாவாசைகளின் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


ஆடி அமாவாசை என்பது பித்ரு லோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்களை நமக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக புறப்படும் நாளாகும். இந்த நாளில் அவர்களை நினைத்து கொடுக்கப்படும் தர்ப்பணம் பித்ருலோகத்தில் அவர்கள் துன்பப்படாமல் நற்கதி அடைய செய்வதுடன், அதன் பலன் நம்முடைய பிள்ளைகளை போய் சேரும். நாம் கொடுக்கும் தர்ப்பணம் நம்முடைய முன்னோர்கள் செய்த பாவம், நாம் செய்த பாவங்களை போக்கு வீட்டில் உள்ள துன்பங்களை போக்கக் கூடியதாகும்.




2023 ம் ஆண்டில் மிகவும் விசேஷமாக ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றன. அதாவது ஆடி முதல் நாளான ஜூலை 17 ம் தேதியும், ஆடி 31 ம் தேதியான ஆகஸ்ட் 16 ம் தேதியும் அமாவாசை திதி வருகிறது. இந்த இரண்டு நாட்களுமே முன்னோர்களை வழிபட்டு திதி கொடுக்க ஏற்ற நாளாகும்.


ஆடி அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து நீர்நிலைகளில் நீராடி, பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்கள் முழுவதுமாக உபவாசம் இருக்க வேண்டும். பகலில் முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து அவர்களுக்கு படைத்த பிறகு, காகத்திற்கு சாதம் வைத்து விட்டு, நாம் உணவு உண்ண வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று நம்முடைய முன்னோர்களை நினைத்து நெய் தீபம் ஏற்றுவது சிறப்பானதாகும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இரைக்கலாம். அதுவும் முடியாதவர்கள் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுக்கலாம். யாராவது இரண்டு பேருக்கானது அன்னதானம் வழங்குவது சிறப்பானது.


அம்மா அல்லது அப்பா அல்லது இருவரும் இல்லாத ஆண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த கணவன் அமாவாசை விரதம் இருக்கலாம். சுமங்கலி பெண்கள் அமாவாசை விரதம் இருக்கவோ, தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது. இறந்த தனது பெற்றோர்களை நினைத்து வழிபட்டு, யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்கலாமே தவிர முறையாக அமாவாசை விரதம் இருக்கக் கூடாது.

சமீபத்திய செய்திகள்

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்