குஷ்பு இப்போ எப்படி இருக்கார்?... அவரே வெளியிட்ட "பிரிஸ்க்" அப்டேட்!

Apr 11, 2023,11:11 AM IST
சென்னை : தனது உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்டை நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பு சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிக காய்ச்சல் காரணமாக நடிகை குஷ்பு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடைசியாக பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அதிகப்படியான உடல் வலி மற்றும் உடல் பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதவனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.  



இதற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன குஷ்பு இன்ஸ்டாகிராமில் தனது உடல்நிலை குறித்து போஸ்ட் போட்டிருந்தார். அதில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விட்டேன். சிறிது காலம் முழுமையான ஓய்வில் இருக்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒரு வாரம் பயணம் செய்வதை முழுவதுமாக தவிர்த்து வேண்டும் என தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் அனுமதி அளித்த பிறகு அலுவலகத்திற்கு சென்று, பணியை தொடர முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்குள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், அனைவரின் அன்பிற்கும் நன்றி தெரிவித்த குஷ்பு, மாஸ்க் அணிந்த தனது பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் போட்டோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து, தான் விரைவில் குணமடைந்து வருவதாக மற்றொரு ஹெல்த் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் குஷ்பு. 

நடிப்பு, அரசியல் என இரண்டிலும் படுபிஸியாக இருந்து வரும் குஷ்பு, பாஜக.,வில் இணைந்த பிறகு செம பிஸியாகி விட்டார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோற்றாலும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி குஷ்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது. குஷ்பு கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். டிவி ஷோக்கள் சிலவற்றிலும் குஷ்பு பங்கேற்று வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்