தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்...இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி

Jun 15, 2023,03:02 PM IST

சென்னை : ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் கவனித்து வந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டு, மற்ற அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமியிடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த இலாக்கா மாற்றம் தொடர்பான அரசு உத்தரவு கவர்னரின் ஒப்புதலுக்காக அவரிடம் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இந்த இலாகா மாற்றத்தால் சோஷியல் மீடியாவில் #MinisterSenthilBalaji  #Cabinetreshuffle போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்