தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்...இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி

Jun 15, 2023,03:02 PM IST

சென்னை : ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவர் கவனித்து வந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டு, மற்ற அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த அரசு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முத்துசாமியிடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் இந்த இலாக்கா மாற்றம் தொடர்பான அரசு உத்தரவு கவர்னரின் ஒப்புதலுக்காக அவரிடம் தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சரவையில் நடைபெற்றுள்ள இந்த இலாகா மாற்றத்தால் சோஷியல் மீடியாவில் #MinisterSenthilBalaji  #Cabinetreshuffle போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்