சென்னை: மிச்சாங் புயல் கோர தாண்டவமாடி வருவதால், சென்னை கடற்கரை டூ தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரயில்களை இயக்க முடியாத அளவுக்கு தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது, பலத்த காற்று, தீவிர கன மழை காரணமாக பாதுகாப்பு கருதி மின்சார ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.
சென்னைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி கோர தாண்டவமாடி வருகிறது மிச்சாம் புயல். புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கன மழை பெய்து வருகிறது. இந்த பேய் மழையால் நேற்று மாலையில் இருந்து சென்னை நகரமும், புறநகர்களும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. தொடர் கனமழையால் சென்னை முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக சென்னை புறநகரில் இயங்கி வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி வழித்தடத்தில் வெள்ள நீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்படும் சேதாரங்களை வைத்து தான் ரயில் இயக்கம் பற்றி அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கனமழையால் ரயில் வழித்தடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை, மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணா நகர், ஈக்காட்டு தாக்கல், அசோக் நகர், அருகம்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, மாம்பழம், பெரம்பூர் அண்ணா நகர், ஆலந்தூர், ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. மழைக் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சாங் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை, இடி மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}