பிரிக்ஸ் மாநாடு : இந்திய-சீன எல்லை பிரச்சனைக்கு முடிவு கிடைக்குமா?

Aug 22, 2023,12:35 PM IST
 ஜோகனஸ்பெர்க் : தென்னாப்பிரிக்காவில் இன்று பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா பிரதமர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளதால் இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் பிரிக்ஸ் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) துவங்குகிறது. இதில் பிரேசில், சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 2019 ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் மாநாடு இதுவாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு நடத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் உலக தலைவர்களின் சந்திப்பு என்பதால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் சீன பிரதம் ஷின் ஜின்பிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இதனால் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா- சீனா பிரதமர்கள் சந்திப்பு ஏற்படலாம், அப்போது எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்கள் சந்திப்பு இதுவரை முடிவாகவில்லை என தெரிகிறது.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் காலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, உலக தலைவர்களை சந்தித்து, பயனுள்ள விஷயங்களை பகிர்வதற்கு இது நல்ல வாய்ப்பு. ஆக்கப்பூர்வ விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதால், எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்