தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. நாடு முழுவதும் முஸ்லீம்கள் தொழுகை

Jun 29, 2023,10:08 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லீம் சமுதாயத்தினர் சிறப்புத் தொழுகை செய்து வழிபட்டனர்.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம்கள் காலையிலேயே சிறப்புத் தொழுகைகளில் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி, பதேபூர் மசூதி உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். போபாலில் உள்ள மசூதியிலும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.



அனைத்து நகரங்களிலும் தொழுகைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் இன்று பக்ரீத் பண்டிகை வழக்கம் போல கொண்டாடப்பட்டது. குர்பானி கொடுக்கப்பட்டது. முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், முஸ்லீம்கள் மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுக்கப்படுவது வழக்கம். இதையொட்டி தமிழ்நாட்டிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் ஆடு விற்பனை களை கட்டியிருந்தது. அதன் வர்த்தகமும் அதிகமாகவே இருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

அதிகம் பார்க்கும் செய்திகள்