தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் கொண்டாட்டம்.. நாடு முழுவதும் முஸ்லீம்கள் தொழுகை

Jun 29, 2023,10:08 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லீம் சமுதாயத்தினர் சிறப்புத் தொழுகை செய்து வழிபட்டனர்.

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் முஸ்லீம்கள் காலையிலேயே சிறப்புத் தொழுகைகளில் கலந்து கொண்டனர். டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி, பதேபூர் மசூதி உள்ளிட்டவற்றில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். போபாலில் உள்ள மசூதியிலும் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பங்கேற்று தொழுகை நடத்தினர்.



அனைத்து நகரங்களிலும் தொழுகைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டிலும் இன்று பக்ரீத் பண்டிகை வழக்கம் போல கொண்டாடப்பட்டது. குர்பானி கொடுக்கப்பட்டது. முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும், முஸ்லீம்கள் மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். 

பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானி கொடுக்கப்படுவது வழக்கம். இதையொட்டி தமிழ்நாட்டிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் ஆடு விற்பனை களை கட்டியிருந்தது. அதன் வர்த்தகமும் அதிகமாகவே இருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்