ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது லஞ்ச வழக்கு

May 13, 2023,10:14 AM IST
டில்லி : போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் ஆர்யான் கானை சேர்க்காமல் இருப்பதற்காக சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணை துவங்கப்பட்டு, மும்பை, டில்லி, ராஞ்சி, கான்பூர் ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைமை அதிகாரியாக உள்ளார் வான்கடே. இவர் தலைமையிலான படையினர் 2021 ம் ஆண்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அங்கு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானும் இருந்தார். அவரை போதை வழக்கில் அதிகாரிகள் செய்தனர்.



இந்த வழக்கில் நான்கு வாரங்கள் வரை ஆர்யான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 2022 ம் ஆண்டு மே மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய ஆர்யான் மீதான அனைத்து போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டன. முன்னதாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, வான்கடே தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் பல தவறுகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 

அதோடு கடந்த ஆண்டு மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வரித்துறை இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார் வான்கடே. தற்போது அவர் மீது லஞ்ச கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்