ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது லஞ்ச வழக்கு

May 13, 2023,10:14 AM IST
டில்லி : போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் ஆர்யான் கானை சேர்க்காமல் இருப்பதற்காக சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணை துவங்கப்பட்டு, மும்பை, டில்லி, ராஞ்சி, கான்பூர் ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைமை அதிகாரியாக உள்ளார் வான்கடே. இவர் தலைமையிலான படையினர் 2021 ம் ஆண்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அங்கு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானும் இருந்தார். அவரை போதை வழக்கில் அதிகாரிகள் செய்தனர்.



இந்த வழக்கில் நான்கு வாரங்கள் வரை ஆர்யான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 2022 ம் ஆண்டு மே மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய ஆர்யான் மீதான அனைத்து போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டன. முன்னதாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, வான்கடே தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் பல தவறுகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 

அதோடு கடந்த ஆண்டு மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வரித்துறை இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார் வான்கடே. தற்போது அவர் மீது லஞ்ச கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்