ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி மீது லஞ்ச வழக்கு

May 13, 2023,10:14 AM IST
டில்லி : போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் ஆர்யான் கானை சேர்க்காமல் இருப்பதற்காக சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்ட விசாரணை துவங்கப்பட்டு, மும்பை, டில்லி, ராஞ்சி, கான்பூர் ஆகிய இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை பிரிவு தலைமை அதிகாரியாக உள்ளார் வான்கடே. இவர் தலைமையிலான படையினர் 2021 ம் ஆண்டு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அங்கு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானும் இருந்தார். அவரை போதை வழக்கில் அதிகாரிகள் செய்தனர்.



இந்த வழக்கில் நான்கு வாரங்கள் வரை ஆர்யான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் 2022 ம் ஆண்டு மே மாதம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறிய ஆர்யான் மீதான அனைத்து போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டன. முன்னதாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, வான்கடே தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் பல தவறுகள் இருப்பதாக சொல்லப்பட்டது. 

அதோடு கடந்த ஆண்டு மே மாதம் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருந்து வரித்துறை இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார் வான்கடே. தற்போது அவர் மீது லஞ்ச கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்