கலைஞர் பேனா நினைவு சின்னம்.. மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

Jun 22, 2023,04:49 PM IST

டெல்லி : சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.   


தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவுகூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் 134 அடி உயரத்தில்ண பேனா வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார்.


பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக பொது நல வழக்குகள் பலவும் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் படி மத்திய அரசிற்கு, தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இன்று அனுமதி அளித்துள்ளது. 


கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்