கலைஞர் பேனா நினைவு சின்னம்.. மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

Jun 22, 2023,04:49 PM IST

டெல்லி : சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.   


தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவுகூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் 134 அடி உயரத்தில்ண பேனா வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார்.


பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக பொது நல வழக்குகள் பலவும் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் படி மத்திய அரசிற்கு, தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இன்று அனுமதி அளித்துள்ளது. 


கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்