டெல்லி : சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை நினைவுகூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.81 கோடி செலவில் தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் 134 அடி உயரத்தில்ண பேனா வடிவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தொடர்ந்து பேசி வருகிறார்.
பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக பொது நல வழக்குகள் பலவும் தொடரப்பட்டுள்ளன. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் படி மத்திய அரசிற்கு, தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் இன்று அனுமதி அளித்துள்ளது.
கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}