சென்னை : அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷன் முடிவெடுக்கலாம் எனக்கூறி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட தடை விதிக்கக் கோரியும் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தலைமை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரியும், கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேர்தல் கமிஷன் ஒப்புதல் தரக்கோரியும் இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி வழக்கை முடித்து வைத்தது. இருந்தாலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஏப்ரல் 20, 21 ஆகிய நாட்களில் இறுதி வாதம் நடைபெறும் என கூறப்பட்டிருந்த படியே இறுதி வாதம் நடைபெறும் என இரண்டு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}