சென்னை : அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷன் முடிவெடுக்கலாம் எனக்கூறி அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட தடை விதிக்கக் கோரியும் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தலைமை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ள உத்தரவிடக் கோரியும், கர்நாடக சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தேர்தல் கமிஷன் ஒப்புதல் தரக்கோரியும் இபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட், அதிமுக பொதுக்குழு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி வழக்கை முடித்து வைத்தது. இருந்தாலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஏப்ரல் 20, 21 ஆகிய நாட்களில் இறுதி வாதம் நடைபெறும் என கூறப்பட்டிருந்த படியே இறுதி வாதம் நடைபெறும் என இரண்டு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}