"முதல்வருக்கு நன்றி".. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நெகிழ்ச்சி!

Jul 02, 2023,03:05 PM IST
சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர் ஜீவால் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியான அதேசமயம் கண்டிப்பான அதிகாரியான சங்கர் ஜீவால் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட்டு வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். ஆவடியின் முதல் போலீஸ் கமிஷனர் இவர் என்ற பெருமையும் ரத்தோருக்கு உண்டு.



மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரத்தோர் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் டிவீட் போட்டுள்ளார். அதில்,  சென்னை மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட வாய்ப்பளித்த, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர காவல்துறையின் 109வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  எனது முந்தைய கமிஷனர்கள் செய்த சிறப்பான பணிகளைத் தொடர்வேன். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சந்தீப் ராய் ரத்தோர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்