"முதல்வருக்கு நன்றி".. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நெகிழ்ச்சி!

Jul 02, 2023,03:05 PM IST
சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர் ஜீவால் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியான அதேசமயம் கண்டிப்பான அதிகாரியான சங்கர் ஜீவால் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட்டு வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். ஆவடியின் முதல் போலீஸ் கமிஷனர் இவர் என்ற பெருமையும் ரத்தோருக்கு உண்டு.



மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரத்தோர் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் டிவீட் போட்டுள்ளார். அதில்,  சென்னை மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட வாய்ப்பளித்த, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர காவல்துறையின் 109வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  எனது முந்தைய கமிஷனர்கள் செய்த சிறப்பான பணிகளைத் தொடர்வேன். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சந்தீப் ராய் ரத்தோர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்