"முதல்வருக்கு நன்றி".. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நெகிழ்ச்சி!

Jul 02, 2023,03:05 PM IST
சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர் ஜீவால் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியான அதேசமயம் கண்டிப்பான அதிகாரியான சங்கர் ஜீவால் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட்டு வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். ஆவடியின் முதல் போலீஸ் கமிஷனர் இவர் என்ற பெருமையும் ரத்தோருக்கு உண்டு.



மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரத்தோர் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் டிவீட் போட்டுள்ளார். அதில்,  சென்னை மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட வாய்ப்பளித்த, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர காவல்துறையின் 109வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  எனது முந்தைய கமிஷனர்கள் செய்த சிறப்பான பணிகளைத் தொடர்வேன். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சந்தீப் ராய் ரத்தோர்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்