"முதல்வருக்கு நன்றி".. சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நெகிழ்ச்சி!

Jul 02, 2023,03:05 PM IST
சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சங்கர் ஜீவால் செயல்பட்டு வந்தார். மிகவும் அமைதியான அதேசமயம் கண்டிப்பான அதிகாரியான சங்கர் ஜீவால் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் டிஜிபியாக பொறுப்பேற்றார்.

இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.  இதற்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட்டு வந்தார் சந்தீப் ராய் ரத்தோர். ஆவடியின் முதல் போலீஸ் கமிஷனர் இவர் என்ற பெருமையும் ரத்தோருக்கு உண்டு.



மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த ரத்தோர் தற்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் டிவீட் போட்டுள்ளார். அதில்,  சென்னை மாநகர காவல்துறை ஆணையராக செயல்பட வாய்ப்பளித்த, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர காவல்துறையின் 109வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  எனது முந்தைய கமிஷனர்கள் செய்த சிறப்பான பணிகளைத் தொடர்வேன். மக்களுக்கு சேவையாற்றுவதே எனது முதல் நோக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சந்தீப் ராய் ரத்தோர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்