சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடும் வெப்பம் விளாசி வந்த தமிழ்நாட்டில் தற்போது வானிலை சட்டென மாறியுள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், திருவண்ணாமலை, கடலூர், காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய மழை பெய்துள்ளது. தென் மேற்குப் பருவ மழையால் நமக்குக் கிடைத்துள்ள பங்கு என்பது 11 சதவீதம் குறைவேயாகும்.
தற்போது பெய்து வரும் மழையானது தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}