சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடும் வெப்பம் விளாசி வந்த தமிழ்நாட்டில் தற்போது வானிலை சட்டென மாறியுள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், திருவண்ணாமலை, கடலூர், காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய மழை பெய்துள்ளது. தென் மேற்குப் பருவ மழையால் நமக்குக் கிடைத்துள்ள பங்கு என்பது 11 சதவீதம் குறைவேயாகும்.
தற்போது பெய்து வரும் மழையானது தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}