சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடும் வெப்பம் விளாசி வந்த தமிழ்நாட்டில் தற்போது வானிலை சட்டென மாறியுள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், திருவண்ணாமலை, கடலூர், காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய மழை பெய்துள்ளது. தென் மேற்குப் பருவ மழையால் நமக்குக் கிடைத்துள்ள பங்கு என்பது 11 சதவீதம் குறைவேயாகும்.
தற்போது பெய்து வரும் மழையானது தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}