சென்னை: சென்னையில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
கடும் வெப்பம் விளாசி வந்த தமிழ்நாட்டில் தற்போது வானிலை சட்டென மாறியுள்ளது. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், திருவண்ணாமலை, கடலூர், காவிரி டெல்டா ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தென் மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவே தற்போதைய மழை பெய்துள்ளது. தென் மேற்குப் பருவ மழையால் நமக்குக் கிடைத்துள்ள பங்கு என்பது 11 சதவீதம் குறைவேயாகும்.
தற்போது பெய்து வரும் மழையானது தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}