சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பிற்பகலுக்கு மேல் வானிலை மாறிய நிலையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.
அக்னிநட்சத்திர காலம் முடிந்தும் கூட தமிழ்நாட்டில் வெயில் மட்டும் ஓயவில்லை. தொடர்ந்து கடுமையாக அடித்தவண்ணம் இருந்தது. சென்னையிலும் வட மாவட்டங்களிலும் சராசரியாக 40 டிகிரிக் செல்சியஸுக்கு மேல்தான் பெரும்பாலான நாட்களில் வெயில் பதிவாகி வந்தது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் நேற்றுடன் கடும் வெயில் நாட்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவும், இனி மழை பெய்யும் என்றும் தமிழ்நாடுவெதர்மேன் நேற்று கூறியிருந்தார். சென்னை, ராணிப்பேட்டை,வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும் இதர மாவட்டங்களில் 24, 25 ஆகிய நாடுகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
நாம இருக்கிறது ஊட்டியா இல்லை சென்னையா என்று கேட்டும் மீம்ஸ் போட்டும் ரகளை செய்திருந்தார். இந்த நிலையில் அவர் சொன்னது போலவே இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. லேசான, மிதமான மழையாக இது இருக்கிறது. காற்று பெரிதாக இல்லை. லேசான இடி அவ்வப்போது வந்த போகிறது. இந்த மழை சற்று வலுத்து தொடர்ந்து பெய்தால் வெக்கை முழுமையாக தணிய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கருமேகம் சூழ மழை பெய்து வருவதால் மக்கள் ஹேப்பி ஆகியுள்ளனர். பிறகென்ன இளையராஜா பாட்டும் தேநீர்க் குவளைகளும் கூடவே கொஞ்சம் சொஜ்ஜி பஜ்ஜியுமாக இந்த சன்டேவை மக்கள் பிளான் பண்ண ஆரம்பித்துள்ளனர் + மட்டன் சிக்கன் சைட் டிஷ்ஷுடன்!
சரி வந்தது வந்துட்டீங்க.. அப்படியே ஒரு குட்டிக் கவிதையைப் படிச்சுட்டுப் போயிருங்க.. ப்ளீஸ்!
வான் திறந்து
மெல்லிய சாரலாய்
மெல்லச் சொட்டு
என் செல்ல மழைச் சிட்டு
பிறகென்ன
இளையராஜா பாட்டும்
தேநீர்க் குவளைகளும்
கொஞ்சம்
தொட்டுக்க மட்டன் சிக்கனும்!
Happy Sunday மக்களே!
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}