ஜூலை 12ம் தேதி வரை.. செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. கோர்ட் உத்தரவு

Jun 28, 2023,04:02 PM IST
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி சிறைக்காவலை நீட்டித்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. நெஞ்சு வலி என்று கூறியதைத் தொடர்ந்து அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டார்.



காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதயபைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை காவலில் அனுப்பி  நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அமலாகக்கத்துறை அவரை விசாரிக்க முடியவில்லை.

அவரது காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி நலம் விசாரித்தார். பின்னர் அவரது நீதிமன்றக்காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையால் ஜூலை  12ம் தேதி வரை விசாரிக்க முடியாத நிலை நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்