ஜூலை 12ம் தேதி வரை.. செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. கோர்ட் உத்தரவு

Jun 28, 2023,04:02 PM IST
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி சிறைக்காவலை நீட்டித்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. நெஞ்சு வலி என்று கூறியதைத் தொடர்ந்து அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு இடம் மாற்றப்பட்டார்.



காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதயபைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார். இந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை காவலில் அனுப்பி  நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அமலாகக்கத்துறை அவரை விசாரிக்க முடியவில்லை.

அவரது காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி நலம் விசாரித்தார். பின்னர் அவரது நீதிமன்றக்காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையால் ஜூலை  12ம் தேதி வரை விசாரிக்க முடியாத நிலை நிலவுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்