சென்னை : சென்னை ரெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச டிக்கெட் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில பயணிகளை தேர்வு செய்த அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை மெட்ரோவில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 7 லட்சமாக இருந்தது, தற்போது 2.5 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோ பயணாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள ஏதாவது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களில் பணி புரிவோர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து இந்த இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த பயனாளர்களை அவர்களின் மார்க்கெட்டிங் டீம் தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வுகள் முடிப்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாள் வரை இலவச டிக்கெட்டாக வழங்கப்படும். பிறகு சலுகை விலையில் இந்த டிக்கெட் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நிரந்தரமாக மெட்ரோவில் அவர்களை பயணம் செய்ய ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்களை மற்றவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாது. இந்த டிக்கெட் பயணம் செய்பவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இலவச டிக்கெட் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
{{comments.comment}}