சென்னை : சென்னை ரெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச டிக்கெட் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில பயணிகளை தேர்வு செய்த அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை மெட்ரோவில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 7 லட்சமாக இருந்தது, தற்போது 2.5 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோ பயணாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள ஏதாவது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களில் பணி புரிவோர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து இந்த இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த பயனாளர்களை அவர்களின் மார்க்கெட்டிங் டீம் தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வுகள் முடிப்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாள் வரை இலவச டிக்கெட்டாக வழங்கப்படும். பிறகு சலுகை விலையில் இந்த டிக்கெட் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நிரந்தரமாக மெட்ரோவில் அவர்களை பயணம் செய்ய ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்களை மற்றவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாது. இந்த டிக்கெட் பயணம் செய்பவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இலவச டிக்கெட் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}