சென்னை : சென்னை ரெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச டிக்கெட் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறிப்பிட்ட சில பயணிகளை தேர்வு செய்த அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை மெட்ரோவில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 7 லட்சமாக இருந்தது, தற்போது 2.5 லட்சமாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோ பயணாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காக மெட்ரோ நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள ஏதாவது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலங்களில் பணி புரிவோர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்து இந்த இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த பயனாளர்களை அவர்களின் மார்க்கெட்டிங் டீம் தேர்வு செய்யும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வுகள் முடிப்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாள் வரை இலவச டிக்கெட்டாக வழங்கப்படும். பிறகு சலுகை விலையில் இந்த டிக்கெட் வழங்கப்படும். பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு நிரந்தரமாக மெட்ரோவில் அவர்களை பயணம் செய்ய ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்களை மற்றவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியாது. இந்த டிக்கெட் பயணம் செய்பவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த இலவச டிக்கெட் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}