எதிர்க்கட்சிகள் கூட்டம்.. முட்டிக் கொண்ட காங்கிரஸ் - ஆம்ஆத்மி.. டீ கொடுத்து கூல் செய்த "தீதி!

Jun 24, 2023,09:31 AM IST
பாட்னா : பாஜக.,விற்கு எதிராக ஒன்று கூடிய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே உரசல் ஏற்பட்டது. பிரச்சனை பெரிதாகி விடக் கூடாது என்பதற்காக டீ, பிஸ்கட் சாப்பிட்டு அமைதியாகும்படி சமாதானம் செய்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக.,விற்கு எதிராக ஒரு அணியாக திரள்வதற்காக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. 



தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய வியூகங்கள், பாஜக.,விற்கு எதிராக மக்களிடம் முன்வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின் போது அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது கொண்டு வரப்பட்ட டெல்லி அவசர சட்டம் குறித்து பேசினார். அதற்கு மல்லிகார்ஜூன கார்கே பதிலளிக்க, இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. அப்போது குறுக்கிட்ட மம்தா பானர்ஜி, டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டு இருவரும் அமைதியாகுங்கள். இது போன்ற பிரச்சனைகளை பேசி சண்டையிட்டு கொள்ளும் நேரம் இது கிடையாது. இது பற்றி பேச வேண்டிய இடமும் இது கிடையாது என சொல்லி சமாதானப்படுத்தினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கடந்த கால விருப்பு, வெறுப்புக்கள் பற்றி இங்கு பேச வேண்டாம். அனைத்தையும் மறந்து பாஜக.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக ஒன்று கூட வேண்டும். பாஜக.,வை எதிர்க்க காங்கிரஸ் எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

இறுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் துணையாக இருக்கும் என காங்கிரஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்