வேகம் பிடிக்கும் பிபர்ஜாய் புயல்..  குஜராத், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

Jun 10, 2023,10:37 AM IST
திருவனந்தபுரம்: அதி தீவிரப் புயலாக மாறியுள்ள பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு பகுதியில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலின் காரணமாக குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடற்கரைப் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருவதால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரேபியக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலானது தற்போது அதி தீவிரமான புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. குறிப்பாக வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடல் பகுதி கொந்தளித்துக் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரைக்குப் பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு செய்துள்ளது. 

குஜராத் தவிர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு நிர்வாகங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்