வேகம் பிடிக்கும் பிபர்ஜாய் புயல்..  குஜராத், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

Jun 10, 2023,10:37 AM IST
திருவனந்தபுரம்: அதி தீவிரப் புயலாக மாறியுள்ள பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு பகுதியில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலின் காரணமாக குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடற்கரைப் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருவதால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரேபியக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலானது தற்போது அதி தீவிரமான புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. குறிப்பாக வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடல் பகுதி கொந்தளித்துக் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரைக்குப் பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு செய்துள்ளது. 

குஜராத் தவிர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு நிர்வாகங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்