வேகம் பிடிக்கும் பிபர்ஜாய் புயல்..  குஜராத், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

Jun 10, 2023,10:37 AM IST
திருவனந்தபுரம்: அதி தீவிரப் புயலாக மாறியுள்ள பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு பகுதியில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலின் காரணமாக குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடற்கரைப் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருவதால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரேபியக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலானது தற்போது அதி தீவிரமான புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. குறிப்பாக வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடல் பகுதி கொந்தளித்துக் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரைக்குப் பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு செய்துள்ளது. 

குஜராத் தவிர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு நிர்வாகங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்