வேகம் பிடிக்கும் பிபர்ஜாய் புயல்..  குஜராத், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

Jun 10, 2023,10:37 AM IST
திருவனந்தபுரம்: அதி தீவிரப் புயலாக மாறியுள்ள பிபர்ஜாய் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு பகுதியில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலின் காரணமாக குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடற்கரைப் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருவதால் அந்த கடற்கரை மூடப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய அரேபியக் கடலில் உருவாகியுள்ள பிபர்ஜாய் புயலானது தற்போது அதி தீவிரமான புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது மேலும் தீவிரமடைந்து வடக்கு வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. குறிப்பாக வல்சாட் பகுதியில் உள்ள தீத்தல் கடல் பகுதி கொந்தளித்துக் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரைக்குப் பொதுமக்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித சூழ்நிலை ஏற்பட்டால் சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் குஜராத் மாநில அரசு செய்துள்ளது. 

குஜராத் தவிர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு நிர்வாகங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்