சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையே அதிமுகவினர் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 29 ம் தேதியான இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கூட்டணி கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்களை சோஷியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், எடுப்பாடி பழனிச்சாமிக்கு ட்விட்டர் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார். விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு தேமுதிக சார்பில் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரிஜினல் எம்ஜிஆருக்குப் பிறகு, கருப்பு எம்ஜிஆர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இப்போது எடப்பாடி பழனிச்சாமிய எம்ஜிஆராக்கி அழகு பார்த்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.. இனி எம்ஜிஆர் வேடத்தில் எடப்பாடியை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பும் கூட மக்களுக்குக் கிடைக்கலாம்.. இந்த சூழலில்தான் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த்.. புது எம்ஜிஆருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}