சட்டத்திற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.. அமலாக்க அதிகாரிகளுக்கு திமுக கிடுக்கிப் பிடி!

Jun 15, 2023,10:07 AM IST
சென்னை: ஆட்சியாளர்களுக்கு தாங்கள் செய்யும் தவறு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். இதை அமலாக்கப் பிரிவினர் உணர வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியும், வழக்கறிஞருமான வில்சன் கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் நாடுமுழுவதும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், தேசியத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முற்றிலும் சட்ட விதிகளை மீறி இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கண்டனம் எழுந்துள்ளது.



மறுபக்கம் பாஜகவினர் இந்தக் கைதை கொண்டாடி வருகின்றனர். அமித்ஷாவைப் பகைத்துக் கொண்டால் இதுதான் கதி என்ற அளவுக்கு அவர்களது கொண்டாட்டம் இருக்கிறது. அமித் ஷா வருகையின் போது கரண்ட்டைப் பிடுங்கினார் செந்தில் பாலாஜி.. இப்போது அவரது பியூஸையே பிடுங்கி விட்டார் அமித்ஷா என்றெல்லாம் பாஜகவினர் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக வழக்கறிஞர் வில்சன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். ��தில் அவர் கூறியிருப்பதாவது: 

ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மதிக்க வேண்டும், அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். தமிழ்நாடு சட்டசபை அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் தலைமைச் செயலகத்திற்குள் ரெய்டு நடத்த வேண்டும் என்றால் சபாநாயகர் அல்லது தலைமைச் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.

விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வரும் ஒருவரை, நள்ளிரவில் எந்தவிதமான காரணமும் இல்லாமல் கைது செய்யும்போது, அவரது குடும்பத்தினருக்கு முறையாக தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் குடும்பத்துக்குக் கூட தகவல் கொடுக்காமல், மனிதாபிமானமே இல்லாமல், உணவு கொடுக்காமல், சரியாக தூங்க விடாமல் மன உளைச்சல் கொடுத்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர்.

போர்க் கைதிகள் கூட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செய்த இத்தகைய கொடுமைகளைப் போன்ற சித்திரவதையை சந்தித்திருக்க மாட்டார்கள். ஜனநாயகத்தில் இத்தகைய கொடூரத்திற்கு என்றுமே இடம் இல்லை என்று கூறியுள்ளார் வில்சன்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்