புதுடில்லி : 2016 ம் ஆண்டு நவம்பர் 08ம் தேதி, ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பு செல்லாது என அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், நான்கு பேர், "மத்திய அரசு பணமதிப்பு செய்தது செல்லும். இந்த முடிவு ஒரே இரவில் எடுக்கப்பட்டது கிடையாது. அதற்கு முன் 6 மாதங்களாக ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளது" என மத்திய அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
அதே சமயம், ஒரே ஒரு நீதிபதி மட்டும் மத்திய அரசின் இந்த முடிவு சட்ட விரோதமானது என தெரிவித்துள்ளார். மேலும், பழைய செல்லாதரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள 52 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகு தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி பி.ஆர்.கவாய் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து 58 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த கடுமையான முடிவில் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டாகவும் மனுதாரர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}