சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் நாளை 8
மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமையன்று 13 மாவட்டங்களுக்கும் கன மழை
எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்
மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது
மேலும் மேற்கு தென் மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில்
நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வு நிலையானது, நாகப்பட்டனத்திற்கு 470
கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை
கொண்டுள்ளது.
இது மேற்கு தென் மேற்கில் தொடர்ந்து நகர்ந்து 25ம்
தேதி காலை இலங்கைக் கரையை நெருங்கும். 26ம் தேதி காலை இது குமரி முனையை
நெருங்கி வரும். இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 25 மற்றும்
26 ஆகிய தேதிகளில் பரவலாக பல இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
25ம்
தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால்
பகுதியிலும் பரவலாக கன மழையை எதிர்பார்க்கலாம்.
.jpg)
26ம் தேதி தேனி,
தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழையை
எதிர்பார்க்கலாம்.
காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}