சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் நாளை 8
மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமையன்று 13 மாவட்டங்களுக்கும் கன மழை
எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்
மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது
மேலும் மேற்கு தென் மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில்
நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வு நிலையானது, நாகப்பட்டனத்திற்கு 470
கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை
கொண்டுள்ளது.
இது மேற்கு தென் மேற்கில் தொடர்ந்து நகர்ந்து 25ம்
தேதி காலை இலங்கைக் கரையை நெருங்கும். 26ம் தேதி காலை இது குமரி முனையை
நெருங்கி வரும். இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 25 மற்றும்
26 ஆகிய தேதிகளில் பரவலாக பல இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
25ம்
தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால்
பகுதியிலும் பரவலாக கன மழையை எதிர்பார்க்கலாம்.
26ம் தேதி தேனி,
தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழையை
எதிர்பார்க்கலாம்.
காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}