சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் நாளை 8
மாவட்டங்களுக்கும், திங்கள்கிழமையன்று 13 மாவட்டங்களுக்கும் கன மழை
எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்
மேற்கு வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது
மேலும் மேற்கு தென் மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில்
நகர்ந்து வருகிறது. இந்த தாழ்வு நிலையானது, நாகப்பட்டனத்திற்கு 470
கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை
கொண்டுள்ளது.
இது மேற்கு தென் மேற்கில் தொடர்ந்து நகர்ந்து 25ம்
தேதி காலை இலங்கைக் கரையை நெருங்கும். 26ம் தேதி காலை இது குமரி முனையை
நெருங்கி வரும். இதன் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் 25 மற்றும்
26 ஆகிய தேதிகளில் பரவலாக பல இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
25ம்
தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால்
பகுதியிலும் பரவலாக கன மழையை எதிர்பார்க்கலாம்.
.jpg)
26ம் தேதி தேனி,
தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,
கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,
நாகப்பட்டனம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கன மழையை
எதிர்பார்க்கலாம்.
காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}