"கடைசில மண்டை ஓடு கூட மிஞ்சாது".. செல்வராகவன் ரொம்ப டென்ஷனா இருக்காரே

May 25, 2023,02:34 PM IST
சென்னை: அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.  கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன் சமீப காலமாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.. அதாவது சினிமாக்களில் சின்னச் சின்னதாக  முக்கியமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இயக்குநராக ஜொலித்த காலத்தைப் போலவே இப்போது அவர் நடிகராகவும் அசத்திக் கொண்டிருக்கிறார்.



பீஸ்ட் படத்தில் ஹீரோ விஜய் கேரக்டருக்கு நிகராக இவரதது கேரக்டரும் ரொம்பவே பேசப்பட்டது. அதேபோல இவரை ஹீரோவாக வைத்து பகாசுரன் படமும் வெளியானது. இந்த நிலையில் அடுத்தடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் இப்போது சமூக வலைதளமான டிவிட்டரில் தொடர்ந்து வித்தியாசமான தத்துவங்களைச் சொல்லி ரசிகர்களை ஈர்த்தும் வருகிறார்.

சமீபத்தில், "உங்கள் வாழ்க்கையில் வரும் அனைவரும் எதையாவது எதிர்பார்த்தே வருவார்கள். அதனால் எதையும் உண்மை என்று நம்பி விடாதீர்கள்" என்று தத்துவம் சொல்லியிருந்தார்.

இல்லாத மரியாதையை தேடாதீர்கள் என்று சமீபத்தில் ஒரு வரியில் உண்மையை உரசி விட்டுச் சென்றிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும்.  அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை. என்று தன்னம்பிக்கை ஊட்டியிருந்தார்.

அதேபோல, அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது ! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை  என்று லவ் சிம்பல் போட்டிருந்தார். அதற்கு இயக்குநர் சீனு ராமசாமியும் வந்து உடனே பதில் போட்டார்.. அவர் கூறுகையில், காதலை மனம் திறந்து சொன்னால் ஒரு காதல் பரிசாக உண்டு. அதற்கு வாழ்த்துகிறேன். இக்கருத்தை சிலாகித்தேன்
செல்வா சார் என்று பாராட்டியிருந்தார்.

இப்படி மணி சாருக்கு அடுத்தபடியாக செல்வா சார் கருத்துக்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இன்று இன்னொரு வித்தியாசமான கருத்தைப் போட்டுள்ளார் செல்வராகவன். அதுதான் இது... "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.  கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்"

உண்மைதானே!

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்