செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Jun 19, 2023,11:30 AM IST

டெல்லி:  தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 21ம் தேதி வருகிறது.


மது விலக்கு மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்து வந்த செந்தில் பாலாஜி  மீது நிலுவையில் இருந்து வந்த பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் தொடர் ஆய்வுகள் மற்றும் ரெய்டுகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி அவர் கதறி அழுததால் அவரை உடனடியாக அரசு ஓமந்தூராரர் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.




அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் 3 இடங்களில்  இதயத்தில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அவர் உடனடியாக காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


அதேசமயம், அவருக்கு அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கு அனுமதி அளித்து செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்கவில்லை. தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.


இந்த நிலையில் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். 


அதில், செந்தில் பாலாஜி மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சர். அவர் இன்னும் பதவியில் தொடருகிறார். அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது தவறானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவை ஜூன் 21ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்