ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணம்

Jan 04, 2023,03:02 PM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான திருமகன் ஈ.வெ.ரா., மாரடைப்பு காரணமாக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவருக்கு வயது 46. இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈவெரா.,வின் கொள்ளு பேரனும் ஆவார். 

திருமகன் ஈவெரா, முதல் முறையாக எம்.எல்.ஏ., ஆனவர் ஆவார்.  ஈரோடு(கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றபோது அதில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.




இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஈரோட்டில் உள்ள கேஎம்சிஹச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

திருமகன் ஈவெராவின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் எம்எல்ஏ திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்