சென்னை : சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறை திரியோதசி நாளில் வரும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. இது தேவர்களையும், அசுரர்களையும் விரட்டியது. விஷத்திடம் இருந்து தப்பிப்பதற்காக கைலாயத்தை சுற்றி இங்கும், அங்குமாக ஓடி இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களை காப்பதற்காக அந்த விஷத்தை குடித்தார் சிவ பெருமான். தேவர்கள் கைலாயத்தை வலம் வந்த முறைக்கு சோமசூக்த முறை என்று பெயர். இந்த முறையிலேயே சிவாலயங்களில் வலம் வர வேண்டும் என்பது நியதி.
மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
ஆனால் விஷத்தை விழுங்கினால் தனக்குள் இருக்கும் உயிர்கள் இறந்து விடுமே என நஞ்சினை கண்டத்தில் நிறுத்தில், நீலகண்டராக காட்சி அளித்தார் சிவ பெருமான். தங்களை காப்பாற்றிய சிவ பெருமானை தேவர்கள் பூஜை செய்து வழிபட்ட காலமே பிரதோஷ காலமாகும். இந்த நாளில் விரதமிருந்து நாமும் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமான பாவங்களும், தோஷங்கள் விலகி, துன்பம் இல்லாத நல்வாழ்வு கிடைக்கும்.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என அழைக்கின்றோம். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களில் கலந்து கொண்ட பலனை, ஒரு சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பெறலாம். பிரதோஷ காலத்தில் நந்தியையும், சிவ பெருமானையும் வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சிவ நாமம் சொல்லி விட வழிபட கேட்ட வரங்கள் அனைத்தையும் ஈசன் அருள்வான்.
சனிப்பிரதோஷ நாளில் சிவனை வழிபட்டால் இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு பல மடங்கு பலனை தரும். பிரதோஷ விரதம் பிறப்பே இல்லாத முக்தி நிலையை கொண்டுக்கும் என புராணங்கள் சொல்கின்றன.
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
{{comments.comment}}