சகல தோஷங்களையும் போக்கும் சனி மஹா பிரதோஷம்!

Mar 04, 2023,09:11 AM IST

சென்னை : சிவ பெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் ஒன்று பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றுமண தேய்பிறை திரியோதசி நாளில் வரும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். 


தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. இது தேவர்களையும், அசுரர்களையும் விரட்டியது. விஷத்திடம் இருந்து தப்பிப்பதற்காக கைலாயத்தை சுற்றி இங்கும், அங்குமாக ஓடி இறுதியாக சிவனிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களை காப்பதற்காக அந்த விஷத்தை குடித்தார் சிவ பெருமான். தேவர்கள் கைலாயத்தை வலம் வந்த முறைக்கு சோமசூக்த முறை என்று பெயர். இந்த முறையிலேயே சிவாலயங்களில் வலம் வர வேண்டும் என்பது நியதி.


மார்ச் 04 - இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


ஆனால் விஷத்தை விழுங்கினால் தனக்குள் இருக்கும் உயிர்கள் இறந்து விடுமே என நஞ்சினை கண்டத்தில் நிறுத்தில், நீலகண்டராக காட்சி அளித்தார் சிவ பெருமான். தங்களை காப்பாற்றிய சிவ பெருமானை தேவர்கள் பூஜை செய்து வழிபட்ட  காலமே பிரதோஷ காலமாகும். இந்த நாளில் விரதமிருந்து நாமும் சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமான பாவங்களும், தோஷங்கள் விலகி, துன்பம் இல்லாத நல்வாழ்வு கிடைக்கும்.


சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என அழைக்கின்றோம். ஆயிரம் சாதாரண பிரதோஷங்களில் கலந்து கொண்ட பலனை, ஒரு சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பெறலாம். பிரதோஷ காலத்தில் நந்தியையும், சிவ பெருமானையும் வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, சிவ நாமம் சொல்லி விட வழிபட கேட்ட வரங்கள் அனைத்தையும் ஈசன் அருள்வான்.


சனிப்பிரதோஷ நாளில் சிவனை வழிபட்டால் இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடு பல மடங்கு பலனை தரும். பிரதோஷ விரதம் பிறப்பே இல்லாத முக்தி நிலையை கொண்டுக்கும் என புராணங்கள் சொல்கின்றன.


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்