செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்...3வது நீதிபதியை நியமித்தது சென்னை ஐகோர்ட்

Jul 05, 2023,12:50 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மற்றும் அவர் தொடர்பான விவகாரத்தில் தினமும் ஒரு புதிய மாற்றம், புதிய உத்தரவு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி தனது அமலாக்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் காவலில் உள்ளார். இந்நிலையில் அவரது நிலை பற்றி அறிய செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுறுத்தல் வழங்கியதை அடுத்து இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்