செந்தில் பாலாஜி வழக்கில் அடுத்த ட்விஸ்ட்...3வது நீதிபதியை நியமித்தது சென்னை ஐகோர்ட்

Jul 05, 2023,12:50 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மற்றும் அவர் தொடர்பான விவகாரத்தில் தினமும் ஒரு புதிய மாற்றம், புதிய உத்தரவு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி தனது அமலாக்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் காவலில் உள்ளார். இந்நிலையில் அவரது நிலை பற்றி அறிய செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் இரு நீதிபதிகள் பெஞ்ச் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தது. இதனால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா பிறப்பித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுறுத்தல் வழங்கியதை அடுத்து இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்