கேரளாவில் கனமழை...வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்

Jul 05, 2023,11:57 AM IST
 கொச்சி : கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தின் வால்பாறை, நீலகிரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவின் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில்  மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஊர் மக்கள் கயிறு கட்டி தோட்ட தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர்.



கேரளாவில் எர்ணாகுளம், கன்னூர், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பேர்மேடு பகுதியில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மணிமாலா ஆற்றில் நீரின் அளவு அபாய அளவை தாண்டி ஓடுவதால் பத்தனம்திட்டா பகுதியில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கன்னூர் மத்திய சிறையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
 

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்