கேரளாவில் கனமழை...வெள்ளத்தில் சிக்கிய ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்

Jul 05, 2023,11:57 AM IST
 கொச்சி : கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தின் வால்பாறை, நீலகிரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என வெதர்மேன் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கேரளாவின் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில்  மழை காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஊர் மக்கள் கயிறு கட்டி தோட்ட தொழிலாளர்களை மீட்டு வருகின்றனர்.



கேரளாவில் எர்ணாகுளம், கன்னூர், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள பேர்மேடு பகுதியில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மணிமாலா ஆற்றில் நீரின் அளவு அபாய அளவை தாண்டி ஓடுவதால் பத்தனம்திட்டா பகுதியில் 9 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கன்னூர் மத்திய சிறையின் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
 

சமீபத்திய செய்திகள்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

அதிகம் பார்க்கும் செய்திகள்