டில்லி, மும்பை, ஐதராபாத்தை மிரட்டும் கனமழை...அலார்ட் விடுத்த வானிலை மையம்

Jun 29, 2023,11:07 AM IST
டில்லி : டில்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல மாட்டங்களுக்கு அதிதீவிர கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

ஐதராபாத்தில் சார்மினார், செகந்திராபாத் உள்ளிட்ட 10 மாட்டங்களில் இன்று மிக அதிக அளவில் மழை கொட்டும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்திற்கு எல்லோ அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிக பட்சமாக அதிலாபாத்தில் 47.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு ஐதராபாத் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.



மும்பையிலும் இன்று கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம் அங்குள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தானே, ரத்னகிரி, நாசிக் உள்ளிட்ட மும்பையை ஒட்டிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு மகாராஷ்டிராவில் பல பகுதிகளில் மழை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



மும்பையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. கனமழையில் சிக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பக்ரீத் தின நாளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பக்ரீத் கொண்டாட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்