இந்துஜா குழும தலைவர் ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா மரணம்!

May 18, 2023,12:40 PM IST
டெல்லி: இந்துஜா குழுமத்தின் தலைவரும், இந்துஜா சகோதரர்களில் மூத்தவருமான ஸ்ரீசந்த் பர்மானந்த் இந்துஜா தனது 87வது வயதில் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

லண்டனில் வசித்து வந்தார் இந்துஜா. உடல்நலக் குறைவால் அவர் காலமானார். ஒரு காலத்தில் போபர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி பெரும் பிரச்சினைகளை சந்தித்தனர் பர்மானந்த் இந்துஜாவும், அவரது சகோதரர்கள் கோபிசந்த், பிரகாஷ் இந்துஜா ஆகியோர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஏபி போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 64கோடி கையூட்டு பெற்றதாக இந்துஜா சகோதரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் பின்னர் இந்துஜா சகோதரர்கள் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டனர்.



இங்கிலாந்து குடியுரிமை பெற்று லண்டனிலேயே செட்டிலாகி விட்டார் பர்மானந்த் இந்துஜா. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்து வந்த அவர் நேற்று காலமானார். ஒரு காலத்தில் இந்துஜா சகோதரர்கள்தான் இங்கிலாந்திலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் லேலன்ட், இந்தஸ்இன்ட் பேங்க், இந்துஜா பேங்க், கல்ப் ஆயில் நிறுவனம், குவாக்கர் ஹட்டன்,இந்துஜா ஹெல்த்கேர் லிமிட்டெட் ஆகியவை இந்துஜா குழுமத்தின் சில முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்