இந்துஜா குழும தலைவர் ஸ்ரீசந்த் பரமானந்த் இந்துஜா மரணம்!

May 18, 2023,12:40 PM IST
டெல்லி: இந்துஜா குழுமத்தின் தலைவரும், இந்துஜா சகோதரர்களில் மூத்தவருமான ஸ்ரீசந்த் பர்மானந்த் இந்துஜா தனது 87வது வயதில் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

லண்டனில் வசித்து வந்தார் இந்துஜா. உடல்நலக் குறைவால் அவர் காலமானார். ஒரு காலத்தில் போபர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி பெரும் பிரச்சினைகளை சந்தித்தனர் பர்மானந்த் இந்துஜாவும், அவரது சகோதரர்கள் கோபிசந்த், பிரகாஷ் இந்துஜா ஆகியோர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஏபி போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ. 64கோடி கையூட்டு பெற்றதாக இந்துஜா சகோதரர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் பின்னர் இந்துஜா சகோதரர்கள் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி விட்டனர்.



இங்கிலாந்து குடியுரிமை பெற்று லண்டனிலேயே செட்டிலாகி விட்டார் பர்மானந்த் இந்துஜா. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்து வந்த அவர் நேற்று காலமானார். ஒரு காலத்தில் இந்துஜா சகோதரர்கள்தான் இங்கிலாந்திலேயே மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் லேலன்ட், இந்தஸ்இன்ட் பேங்க், இந்துஜா பேங்க், கல்ப் ஆயில் நிறுவனம், குவாக்கர் ஹட்டன்,இந்துஜா ஹெல்த்கேர் லிமிட்டெட் ஆகியவை இந்துஜா குழுமத்தின் சில முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்