களை கட்டும் உலகக் கோப்பை கிரிக்கெட்.. சென்னையில்.. லட்டு போல 5 போட்டிகள்..!

Jun 27, 2023,01:11 PM IST
 சென்னை:  சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 5 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவின் முதல் போட்டியே சென்னையில்தான் நடைபெறப் போகிறது என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். முதல் போட்டியிலேயே இந்தியாவை சூப்பராக உற்சாகப்படுத்தி பூஸ்ட் கொடுத்து பட்டையைக் கிளப்பும் வெற்றிக்கு உதவியாக சென்னை ரசிகர்களின் விசில் சத்தம் ஆரவாரமாக காத்திருக்கிறது.

மொத்தம் 10 அணிகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.  ரவுன்ட் ராபின் முறையில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடனும் தலா ஒரு முறை மோதும். அதன் பின்னர் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்... அதாவது அரை இறுதிக்குத் தகுதி பெறும்.

முதல் அரை இறுதிப் போட்டியானது நவம்பர் 15ம் தேதி மும்பையில் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டி நவம்பர் 16ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகள் நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறும்.

சென்னையில் 5 போட்டிகள்

சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியானது அக்டோபர் 8ம் தேதி நடைபெறும். அதில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மைதானத்தில் நடைபெறும் பிற போட்டிகள் குறித்த விவரம்:

அக்டோபர் 14 : நியூசிலாந்து - வங்கதேசம் 
அக்டோபர் 18 : நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 23 : பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 27 : பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்