களை கட்டும் உலகக் கோப்பை கிரிக்கெட்.. சென்னையில்.. லட்டு போல 5 போட்டிகள்..!

Jun 27, 2023,01:11 PM IST
 சென்னை:  சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 5 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவின் முதல் போட்டியே சென்னையில்தான் நடைபெறப் போகிறது என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். முதல் போட்டியிலேயே இந்தியாவை சூப்பராக உற்சாகப்படுத்தி பூஸ்ட் கொடுத்து பட்டையைக் கிளப்பும் வெற்றிக்கு உதவியாக சென்னை ரசிகர்களின் விசில் சத்தம் ஆரவாரமாக காத்திருக்கிறது.

மொத்தம் 10 அணிகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.  ரவுன்ட் ராபின் முறையில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடனும் தலா ஒரு முறை மோதும். அதன் பின்னர் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்... அதாவது அரை இறுதிக்குத் தகுதி பெறும்.

முதல் அரை இறுதிப் போட்டியானது நவம்பர் 15ம் தேதி மும்பையில் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டி நவம்பர் 16ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகள் நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறும்.

சென்னையில் 5 போட்டிகள்

சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியானது அக்டோபர் 8ம் தேதி நடைபெறும். அதில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மைதானத்தில் நடைபெறும் பிற போட்டிகள் குறித்த விவரம்:

அக்டோபர் 14 : நியூசிலாந்து - வங்கதேசம் 
அக்டோபர் 18 : நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 23 : பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 27 : பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்