களை கட்டும் உலகக் கோப்பை கிரிக்கெட்.. சென்னையில்.. லட்டு போல 5 போட்டிகள்..!

Jun 27, 2023,01:11 PM IST
 சென்னை:  சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் மொத்தம் 5 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியாவின் முதல் போட்டியே சென்னையில்தான் நடைபெறப் போகிறது என்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். முதல் போட்டியிலேயே இந்தியாவை சூப்பராக உற்சாகப்படுத்தி பூஸ்ட் கொடுத்து பட்டையைக் கிளப்பும் வெற்றிக்கு உதவியாக சென்னை ரசிகர்களின் விசில் சத்தம் ஆரவாரமாக காத்திருக்கிறது.

மொத்தம் 10 அணிகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளன.  ரவுன்ட் ராபின் முறையில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடனும் தலா ஒரு முறை மோதும். அதன் பின்னர் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்... அதாவது அரை இறுதிக்குத் தகுதி பெறும்.

முதல் அரை இறுதிப் போட்டியானது நவம்பர் 15ம் தேதி மும்பையில் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டி நவம்பர் 16ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகள் நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்  நடைபெறும்.

சென்னையில் 5 போட்டிகள்

சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியானது அக்டோபர் 8ம் தேதி நடைபெறும். அதில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதவுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மைதானத்தில் நடைபெறும் பிற போட்டிகள் குறித்த விவரம்:

அக்டோபர் 14 : நியூசிலாந்து - வங்கதேசம் 
அக்டோபர் 18 : நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 23 : பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 27 : பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்