சிஎஸ்கே. க்கு விசில் போடு.. குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறி "சூப்பர்"!

May 24, 2023,09:05 AM IST
சென்னை : ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் Qualifier எனப்படும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 2023 போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. பிளேஆஃபிற்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றன. இந்த 4 அணிகளில் பைனலுக்கு செல்ல போகும் இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது தொடங்கியுள்ளன.



நேற்று நடைபெற்ற முதல்வர் குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் அணி.

குஜராத் அணி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த போதிலும் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் 2023 சீசனில் குஜராத் அணியை முதன் முறையாக சென்னை அணி வீழ்த்தி உள்ளது. 

குஜராத்திற்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி பைனலுக்குள் நுழைந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக அளவாக, அதாவது 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. 6 இறுதிப் போட்டிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 2வது இடத்தில் உள்ளது. சென்னை பெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றியை அந்த அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்