சீனாவை பின்னுக்குத் தள்ளி.. உலகின் நம்பர் 1 நாடானது இந்தியா.. மக்கள் தொகையில்!

Apr 19, 2023,02:22 PM IST

நியூயார்க் : உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சீனாவை விட இந்தியாவில்  ஏறக்குறைய 3 மில்லியன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக ஐநா. கூறியுள்ளது.

2023 ம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்த புள்ளி விபர அறிக்கையை ஐநா.,வின் UNFPA வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86  கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கிறது. 34 கோடி மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.



சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும் என முன்பே ஐநா கூறி இருந்தது. ஆனால் சரியான புள்ளி விபரம் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது எத்தனை மில்லியன் அளவிற்கு இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. கூறியுள்ளது. அதே சமயம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள்தொகையை துல்லியமாக கணக்கிடுவது முடியாத காரியம் என ஐநா தெரிவித்துள்ளது.

கடைசியாக இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதை சரியான நேரத்தில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும், சீனாவிலும் எதிர்பார்த்ததை விட மூன்றில் ஒன்று பங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை முதல் முறையாக சரியாக துவங்கியது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்