சீனாவை பின்னுக்குத் தள்ளி.. உலகின் நம்பர் 1 நாடானது இந்தியா.. மக்கள் தொகையில்!

Apr 19, 2023,02:22 PM IST

நியூயார்க் : உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சீனாவை விட இந்தியாவில்  ஏறக்குறைய 3 மில்லியன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக ஐநா. கூறியுள்ளது.

2023 ம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்த புள்ளி விபர அறிக்கையை ஐநா.,வின் UNFPA வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86  கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கிறது. 34 கோடி மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.



சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும் என முன்பே ஐநா கூறி இருந்தது. ஆனால் சரியான புள்ளி விபரம் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது எத்தனை மில்லியன் அளவிற்கு இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. கூறியுள்ளது. அதே சமயம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள்தொகையை துல்லியமாக கணக்கிடுவது முடியாத காரியம் என ஐநா தெரிவித்துள்ளது.

கடைசியாக இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதை சரியான நேரத்தில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும், சீனாவிலும் எதிர்பார்த்ததை விட மூன்றில் ஒன்று பங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை முதல் முறையாக சரியாக துவங்கியது.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்