சீனாவை பின்னுக்குத் தள்ளி.. உலகின் நம்பர் 1 நாடானது இந்தியா.. மக்கள் தொகையில்!

Apr 19, 2023,02:22 PM IST

நியூயார்க் : உலக மக்கள் தொகை எண்ணிக்கையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சீனாவை விட இந்தியாவில்  ஏறக்குறைய 3 மில்லியன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகமாக இருப்பதாக ஐநா. கூறியுள்ளது.

2023 ம் ஆண்டில் உலக மக்கள் தொகை எண்ணிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்த புள்ளி விபர அறிக்கையை ஐநா.,வின் UNFPA வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மக்கள் தொகை 142.86  கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கிறது. 34 கோடி மில்லியன் மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.



சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி விடும் என முன்பே ஐநா கூறி இருந்தது. ஆனால் சரியான புள்ளி விபரம் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது எத்தனை மில்லியன் அளவிற்கு இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக ஐ.நா. கூறியுள்ளது. அதே சமயம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள்தொகையை துல்லியமாக கணக்கிடுவது முடியாத காரியம் என ஐநா தெரிவித்துள்ளது.

கடைசியாக இந்தியாவில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதை சரியான நேரத்தில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும், சீனாவிலும் எதிர்பார்த்ததை விட மூன்றில் ஒன்று பங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. கடந்த 60 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு சீனாவின் மக்கள் தொகை முதல் முறையாக சரியாக துவங்கியது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்