ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே!

May 18, 2023,01:15 PM IST
சென்னை : சென்னையில் நடைபெற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இறுதிக் கடட்த்தை நெருங்கி வருகிறது. இன்னும் 8 போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. இதில் பிளே ஆஃப் போட்டிகள் மே 23 ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் 3 போட்டிகளில் ஏற்கனவே முதல் போட்டி நிறைவடைந்து விட்டது. இதில் வெற்றி பெற்று, முதல் ஆளாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.



பிளே ஆஃப் சுற்றில் மீதமுள்ள 3 இடங்களை கைப்பற்ற ஏழு அணிகள் போட்டி களத்தில் உள்ளன. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் களத்தில் உள்ளன. 

புள்ளிகளின் அடிப்படையிலான தர வரிசை பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் சம புள்ளிகளுடன் உள்ளன.மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. 

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் சென்னையில் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக குவியும் ரசிகர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஆன்லைனில் மட்டும் டிக்கெட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்கள் பிசிசிஐ நிர்வாகத்தால் மட்டுமே விற்பனை செய்யப்படும், தமிழக கிரிக்கெட் வாரியத்தால் அல்ல என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்கள் இன்று பிற்பகலல் 12 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக  சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற மாநில ஐபிஎல் ரசிகர்களும் செம குஷியாகி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்