செந்தில் பாலாஜி கைது..  "பாஜக மீண்டும் அத்துமீறல்".. ஜோதிமணி கடும் பாய்ச்சல்

Jun 14, 2023,12:20 PM IST

கரூர்: தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதற்கு கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு கைது செய்திருப்பதற்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. 




கரூரைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் எம்.பியுமான ஜோதிமணியும் செந்தில் பாலாஜி கைதைக் கண்டித்துள்ளார். கரூர் எம்.பி தேர்தலின்போது ஜோதிமணி வெற்றிக்காக மிகத் தீவிரமாக பாடுபட்டவர் செந்தில் பாலாஜி. அதேபோல  செந்தில் பாலாஜிக்காக எம்எல்ஏ தேர்தலில் தீவிரமாக வாக்கு சேகரித்தவர் ஜோதிமணி என்பது நினைவிருக்கலாம்.


செந்தில் பாலாஜி குறித்து ஜோதிமணி போட்டுள்ள டிவீட்டில், அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி  துன்புறுத்தப்பட்டு, நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.


தமிழக அரசின் இதயமான தலைமை செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய வேண்டிய, பலமணி நேரம் முறையாக விசாரணைக்கு ஒத்துழைத்த அமைச்சரை நள்ளிரவில் கைதுசெய்ய வேண்டிய அவசரம் ஏன்?


எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் தொடர்ச்சியாகவே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்பதை இந்த அத்துமீறல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதையும், அமைச்சர் கைது செய்யப்பட்டு இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜோதிமணி.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்