சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட் லீக்கில் இது 17வது ஐபிஎல் தொடராகும். இந்த ஐபிஎல் சீசன் எப்போது நடைபெறும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடர், தோனி கேப்டனாக களமிறங்கும் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுவதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றிய தகவல்களை அவ்வப்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தீபக் சாகர், முகேஷ் சவுத்ரி உள்ளிட்டோர் சென்னை வீரர்களின் ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர்.
தற்போது, சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி குறித்து வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரீனா கைஃப் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}