சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். டி20 கிரிக்கெட் லீக்கில் இது 17வது ஐபிஎல் தொடராகும். இந்த ஐபிஎல் சீசன் எப்போது நடைபெறும் என்ற தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஐபிஎல் தொடர், தோனி கேப்டனாக களமிறங்கும் கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்படுவதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றிய தகவல்களை அவ்வப்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் உரிமையை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தீபக் சாகர், முகேஷ் சவுத்ரி உள்ளிட்டோர் சென்னை வீரர்களின் ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர்.
தற்போது, சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாசிடராக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணி குறித்து வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரீனா கைஃப் இடம் பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}