செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் மனு தாக்கல்

Aug 29, 2023,12:29 PM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவசர மனுவாக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் பணம் வாங்கி ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் பல ஆண்டுகளுக்கு பிறகு விசாரைணயை துவக்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.



இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் செந்தில் பாலாஜி பலமுறை கோர்ட்டில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்து விட்டார். ஆனால் அவர் அமைச்சராக உள்ளதாக அவருக்கு ஜாமின் வழங்கினால் வழக்கின் விசாரணை முறையாக நடக்காது என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ என்பவர் மனுத்தால் செய்துள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை எனக் கூறி சென்னை சிறப்பு கோர்ட் மனுவை திருப்பி அனுப்பியது.

இந்நிலையில் மீண்டும் ஜாமின் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரைணக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்