தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்... தவிக்கும் மக்கள்

Mar 03, 2023,12:34 PM IST
சென்னை : தமிழகத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் காய்ச்சல் காரணமாக மீண்டும் கொரோனா பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் இருந்து வருகிறது.



கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக் கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 



சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தீவிர சளி, இருமல், தொண்டை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. இதன் அறிகுறிகளும் கொரோனா அறிகுறிகள் போன்றே இருப்பதால் புதிய கொரோனா வகையா என்ற சந்தேகமும் மக்களிடம் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்