6 முஸ்லீம் நாடுகளை குண்டு வீசித் தகர்த்தவர் ஒபாமா.. நிர்மலா சீதாராமன் தாக்கு!

Jun 26, 2023,09:33 AM IST
டெல்லி: பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது 6 முஸ்லீம் நாடுகளை குண்டு வீசித் தகர்த்தவர். அந்த நாடுகள் மீது 26,000க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன. அவர், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் குறித்து கவலைப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியின்போது, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியாவில் முஸ்லீம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா பிளவுண்டு போகும் என்று தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். அப்போது பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒபாமாவின் பேட்டிக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு படி மேலே போய் ஹுசேன் ஒபாமா என்று அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒபாமாவின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், நமது பிரதமர், அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசுகையில், தனது அரசு அனைத்து மக்களுக்குமானது, அனைவரின் வளர்ச்சிக்குமானது என்பதை தெளிவாக விளக்கினார். எந்த ஒரு பிரிவு மக்களும் இங்கு பாரபட்சமாக நடத்தப்படவில்லை என்பதையும் விளக்கினார். ஆனாலும் இதையும் தாண்டி, எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒன்றை சிலர் பிரச்சினையாக்கப் பார்க்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நாடுகளும் 13 விருதுகள் கொடுத்துள்ளன. அதில், 6 விருதுகள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகள் ஆகும். 

நமது பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு அதிபரை சந்தித்து வந்த நிலையில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர், நமது பிரதமர் குறித்துப் பேசியதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.  இதுகுறித்து நான் எச்சரிக்கையுடன் பேச விரும்புகிறேன். காரணம், இரு நாடுகளின் உறவைப் பாதுகாப்பது முக்கியம். நமக்கு அமெரிக்காவின் நட்பு வேண்டும். அதேசமயம், இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து யாரேனும் கருத்து தெரிவித்தால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது நமது கடமை.

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள 6 நாடுகளில் மிகப் பெரிய அளவில் நடந்த குண்டுவீச்சுகளுக்குக் காரணமானவர் இந்த முன்னாள் அதிபர். அந்த நாடுகள் மீது 26,000 குண்டுகள் வீசி நாசமாக்கப்பட்டன.  இப்படிப்பட்ட நிலையில், இவரது கவலையை, அக்கறையை யார் நம்புவார்கள்.. எப்படி நம்ப முடியும்?

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிக் கொள்கைகளை எதிர்த்து வெல்ல முடியாது என்பதால் மதத்தின் பெயரால் நமது  பெயரைக் கெடுக்கும் முயற்சியாகவே இதை நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்