புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு மார்ச் 13 ம் தேதியான இன்று துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கருத்திற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். ஆனால் அதானி குழும விவகாரங்களை திசை திருப்புவதற்காக தான் பாஜக அரசு, ராகுலின் பேச்சை கையில் எடுத்திருப்பதாக காங்கிரசாரும் குற்றம்சாட்டினர்.
இரு கட்சி உறுப்பினர்களும் அமளி செய்ததால் கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவல்கள் முடங்கின. லோக்சபாவின் இன்றைய அமர்வில் அதானி குழும ஊழல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அமளிக்கு இடையிலும் அதானி குழு கடன் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி குழுமம் மட்டுமல்ல எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மேலும், எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்திற்கு வழங்கி மொத்த கடன் தொகை 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 6,347.32 கோடியாக இருந்தது. 2023 ம் ஆண்டு மார்ச் 05 ம் தேதி நிலவரப்படி இது 6182.64 கோடியாக குறைந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பதில் காரணமாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் பார்லிமென்ட்டின் இரு அவைகளும் மார்ச் 14 ம் தேதியான நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}