புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு மார்ச் 13 ம் தேதியான இன்று துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கருத்திற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். ஆனால் அதானி குழும விவகாரங்களை திசை திருப்புவதற்காக தான் பாஜக அரசு, ராகுலின் பேச்சை கையில் எடுத்திருப்பதாக காங்கிரசாரும் குற்றம்சாட்டினர்.
இரு கட்சி உறுப்பினர்களும் அமளி செய்ததால் கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவல்கள் முடங்கின. லோக்சபாவின் இன்றைய அமர்வில் அதானி குழும ஊழல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அமளிக்கு இடையிலும் அதானி குழு கடன் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி குழுமம் மட்டுமல்ல எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மேலும், எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்திற்கு வழங்கி மொத்த கடன் தொகை 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 6,347.32 கோடியாக இருந்தது. 2023 ம் ஆண்டு மார்ச் 05 ம் தேதி நிலவரப்படி இது 6182.64 கோடியாக குறைந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பதில் காரணமாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் பார்லிமென்ட்டின் இரு அவைகளும் மார்ச் 14 ம் தேதியான நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}