புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி நிறுவனம் உள்ளிட்ட எந்த நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு மார்ச் 13 ம் தேதியான இன்று துவங்கியது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே லண்டனில், இந்திய ஜனநாயகம் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கருத்திற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். ஆனால் அதானி குழும விவகாரங்களை திசை திருப்புவதற்காக தான் பாஜக அரசு, ராகுலின் பேச்சை கையில் எடுத்திருப்பதாக காங்கிரசாரும் குற்றம்சாட்டினர்.
இரு கட்சி உறுப்பினர்களும் அமளி செய்ததால் கூட்டத் தொடரின் முதல் நாள் அலுவல்கள் முடங்கின. லோக்சபாவின் இன்றைய அமர்வில் அதானி குழும ஊழல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. அமளிக்கு இடையிலும் அதானி குழு கடன் விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் தீபக் பாய்ஜ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, அதானி குழுமம் மட்டுமல்ல எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விபரங்களையும் வெளியிட முடியாது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மேலும், எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்திற்கு வழங்கி மொத்த கடன் தொகை 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி நிலவரப்படி 6,347.32 கோடியாக இருந்தது. 2023 ம் ஆண்டு மார்ச் 05 ம் தேதி நிலவரப்படி இது 6182.64 கோடியாக குறைந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமனின் இந்த பதில் காரணமாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தன. இதனால் பார்லிமென்ட்டின் இரு அவைகளும் மார்ச் 14 ம் தேதியான நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}