அத்துமீறி வந்தா சுட்டுப்புடுவோம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!

Jul 10, 2023,10:14 AM IST
பியாங்யாங்: வட கொரியாவின் வான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் அத்துமீறி கண்காணிப்பை மேற்கொண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்தள்ளது.

தேவையில்லாமல் தங்களது எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறியதாகவும், இதை உடனே நிறுத்திக் கொள்ளாவிட்டால் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் வட கொரியா கூறியுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தொடர்ந்தால் கடுமையான தாக்குல் தொடுக்கப்படும். அமெரிக்க விமானங்களை சுட்டுத் தள்ளவும் தயங்க மாட்டோம். அப்படி நடந்தால் அது அணு ஆயுதப் பயன்பாட்டில் போய் முடியும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.



இதுகுறித்து வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், அமெரிக்கா தனது கண்காணிப்பு விமானங்களையும், டிரோன்களையும் ஏவி வட கொரியாவை உளவு பார்க்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை மட்டுமல்லாமல், இப்பிராந்தியத்தின் அமைதியையும் சேர்த்தே கெடுக்கும். 

இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் வட கொரியா கட்டுப்பாடு காக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த காலங்களை அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றார் அவர். வட கொரியாவின் இந்த எச்சரிக்கை குறித்து  இதுவரை அமெரிக்கா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்