அத்துமீறி வந்தா சுட்டுப்புடுவோம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!

Jul 10, 2023,10:14 AM IST
பியாங்யாங்: வட கொரியாவின் வான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் அத்துமீறி கண்காணிப்பை மேற்கொண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்தள்ளது.

தேவையில்லாமல் தங்களது எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறியதாகவும், இதை உடனே நிறுத்திக் கொள்ளாவிட்டால் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் வட கொரியா கூறியுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தொடர்ந்தால் கடுமையான தாக்குல் தொடுக்கப்படும். அமெரிக்க விமானங்களை சுட்டுத் தள்ளவும் தயங்க மாட்டோம். அப்படி நடந்தால் அது அணு ஆயுதப் பயன்பாட்டில் போய் முடியும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.



இதுகுறித்து வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், அமெரிக்கா தனது கண்காணிப்பு விமானங்களையும், டிரோன்களையும் ஏவி வட கொரியாவை உளவு பார்க்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை மட்டுமல்லாமல், இப்பிராந்தியத்தின் அமைதியையும் சேர்த்தே கெடுக்கும். 

இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் வட கொரியா கட்டுப்பாடு காக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த காலங்களை அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றார் அவர். வட கொரியாவின் இந்த எச்சரிக்கை குறித்து  இதுவரை அமெரிக்கா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்