அத்துமீறி வந்தா சுட்டுப்புடுவோம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா!

Jul 10, 2023,10:14 AM IST
பியாங்யாங்: வட கொரியாவின் வான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் அத்துமீறி கண்காணிப்பை மேற்கொண்டால் சுட்டுத் தள்ளுவோம் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்தள்ளது.

தேவையில்லாமல் தங்களது எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறியதாகவும், இதை உடனே நிறுத்திக் கொள்ளாவிட்டால் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் வட கொரியா கூறியுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால் தொடர்ந்தால் கடுமையான தாக்குல் தொடுக்கப்படும். அமெரிக்க விமானங்களை சுட்டுத் தள்ளவும் தயங்க மாட்டோம். அப்படி நடந்தால் அது அணு ஆயுதப் பயன்பாட்டில் போய் முடியும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.



இதுகுறித்து வட கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், அமெரிக்கா தனது கண்காணிப்பு விமானங்களையும், டிரோன்களையும் ஏவி வட கொரியாவை உளவு பார்க்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையிலான மோதலை மட்டுமல்லாமல், இப்பிராந்தியத்தின் அமைதியையும் சேர்த்தே கெடுக்கும். 

இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் வட கொரியா கட்டுப்பாடு காக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. கடந்த காலங்களை அமெரிக்கா மறந்து விடக் கூடாது என்றார் அவர். வட கொரியாவின் இந்த எச்சரிக்கை குறித்து  இதுவரை அமெரிக்கா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்