டில்லி குடிமகன்களுக்கு குட் நியூஸ்...இனி மெட்ரோவில் இதுக்கு அனுமதி உண்டு

Jun 30, 2023,04:35 PM IST
டில்லி : டில்லி மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் இனி நபர் ஒருவர் சீல் செய்யப்பட்ட இரண்டு சரக்கு பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை டில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் மட்டுமே மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மெட்ரோவில் இதுவரை மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மெட்ரோவிற்குள் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படாத சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் மட்டுமே இரண்டு வரை எடுத்துச் செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. 



மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முறையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் யாராவது மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்