டில்லி குடிமகன்களுக்கு குட் நியூஸ்...இனி மெட்ரோவில் இதுக்கு அனுமதி உண்டு

Jun 30, 2023,04:35 PM IST
டில்லி : டில்லி மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் இனி நபர் ஒருவர் சீல் செய்யப்பட்ட இரண்டு சரக்கு பாட்டில்களை எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை டில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனில் மட்டுமே மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மெட்ரோவில் இதுவரை மது பாட்டில்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மெட்ரோவிற்குள் மது அருந்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படாத சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் மட்டுமே இரண்டு வரை எடுத்துச் செல்லலாம் என சொல்லப்பட்டுள்ளது. 



மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முறையான ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பயணிகள் யாராவது மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்