புதுடில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அது குறித்து ஆலோசனை செய்வதற்காக பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. மத்தியசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி நேற்று ஒரே நாளில் 1134 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7026 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி சட்டீஸ்கர், டில்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் வீதம் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இதனை தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக உயர்மட்டக் குழு உடனான ஆலோசனை கூட்டத்தை பிரதம் மோடி கூட்டி உள்ளார். இன்று மாலை 04.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}