புதுடில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் அது குறித்து ஆலோசனை செய்வதற்காக பிரதமர் மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. மத்தியசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி நேற்று ஒரே நாளில் 1134 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7026 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி சட்டீஸ்கர், டில்லி, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா ஒருவர் வீதம் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 813 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இதனை தடுப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக உயர்மட்டக் குழு உடனான ஆலோசனை கூட்டத்தை பிரதம் மோடி கூட்டி உள்ளார். இன்று மாலை 04.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}