பிரதமர் மோடி வெளியிட்ட ரூ. 75 நாணயம்.. எங்கு கிடைக்கும்.. எப்படி வாங்கலாம்..?

May 28, 2023,03:04 PM IST
சென்னை:  புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட சிறப்பு ரு. 75 நாணயத்தை எங்கு பெறுவது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் இன்று டெல்லியில் திறந்து வைக்கப்பட்டது. காலையில் பூஜையுடன் தொடங்கிய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய நாடாளுமன்றத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இன்று காலை முதல் பிற்பகல் அவரது உரையுடன் இந்த விழா முடிவடைந்தது. மொத்த நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடிதான் நடு நாயகமாக காணப்பட்டார். விழா நாயகராகவும் அவரே வலம் வந்தார்.




இந்த விழாவின் முக்கிய அம்சமாக ரூ. 75 நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நாணயத்தை எங்கு வாங்கலாம் என்பது குறித்துப் பார்ப்போம். பொதுவாக இதுபோன்று சிறப்பு நாணயமாக வெளியிடும்போது அது குறிப்பிட்ட அளவில் மட்டுமே அச்சடிக்கப்படும். அதிக அளவில் இது புழக்கத்தில் விடப்பட மாட்டாது.

இந்தியாவில் மொத்தம் நான்கு இடங்களில்தான் நாணயங்கள் அச்சடிக்கப்படுகின்றன. மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் உள்ள அரசு நாணய அச்சகங்களில்தான் நாணயங்கள் அச்சடிக்கப்படும். இந்த இடங்களில்தான் நாம் சிறப்பு நாணயங்களையும் வாங்க முடியும்.

இந்த நாணய அச்சகங்களுக்கு என்று தனியாக இணையதளங்கள் உள்ளன. அதில் போய் நாம் முன்பதிவு செய்து நாணயங்களைப் பெறலாம்.  இந்த அச்சகங்களின் இணையதளங்களில் நினைவு நாணயங்களை எப்படிப் பெறலாம் என்ற வழிகாட்டலும் இடம் பெற்றிருக்கும். அதைப் பின்பற்றி நாம் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்