ஜனாதிபதிதான் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும்.. ராகுல் காந்தி

May 22, 2023,01:27 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அல்ல, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகம் 90 ஆண்டுகளைக் கடந்து விட்ட மிகப் பழமையான கட்டடமாகும். இதைத் தொடர்ந்து புதிய  நாடாளுமன்றம் அதி நவீனமாக பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து மே 28ம் தேதி அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். வீர சவர்க்கரின் பிறந்த நாளன்று இந்த திறப்பு விழா நடைபெறுகிறது.



இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை  பிரதமர் மோடி திறந்து வைக்கக் கூடாது. மாறாக, குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இந்த புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர  மோடி நாட்டினார். அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கின.  புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்  இடம் பெறும் லோக்சபா அரங்கில் 888 உறுப்பினர்கள் வரை அமர முடியும். அதேபோல ராஜ்யசபாக ட்டடத்தில்  380க்கும் மேற்பட்டோர் அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்