பவுலர்களில் அஸ்வின் டாப்.. பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் தான் நம்பர் 1!

Jun 21, 2023,04:06 PM IST
துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் தொடர்கிறார். பேட்டிங்கில் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரிவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஆர். அஸ்வின் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் கூட அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாமிக மோசமான தோல்வியைத் தழுவியது. ஒரு வேளை அஸ்வின் பந்து வீச வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் அவரால் ஏற்படுத்தியிருக்க முடியும் என்பது ரசிகர்களின் குமுறலாக உள்ளது.

அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். இவர் 829 புள்ளிகளுடன் உள்ளார். இந்திய பவுலர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8 மற்றும் 9வது இடத்தில் உள்ளனர். இவர்களது தரவரிசையிலும் மாற்றம் இல்லை. அப்படியே தொடர்கிறார்கள்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை அந்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசக்னே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்