ரூ.2000 நோட்டு திரும்ப பெற இது தான் காரணம்.. ரிசர்வ் வங்கி விளக்கம்

May 20, 2023,09:30 AM IST

டெல்லி :  ரூ. 2000 நோட்டு ஏன் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.

2016 ம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று மாலை அறிவித்தது. தற்போதுள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அதில், இந்திய டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஆண்டு அறிக்கையின் படி யூபிஐ பணபரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. யூபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார், மொபைல், பிரிபெய்டு கார்டுகள் வழியாக 2022 ம் ஆண்டு மட்டும் ரூ.14 .92 லட்சம் கோடி மதிப்பிலான 87.92 பில்லியன் பணபரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதனால் ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது.



clean note policy அடிப்படையில் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு உயர் தரத்திலான ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ரூ.2000 நோட்டுக்கள் 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டவையாகும். அதன் வாழ்நாள் காலமான 4 முதல் 5 ஆண்டுகளை எட்டி விட்டதால் அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளிவிபரத்தின் படி ரூ.6.73 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இவை தற்போது பாதியாக குறைந்து விட்டன. 2023 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளி விபர கணக்கின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே, அதாவது 10.8 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இப்படி புழக்கத்தில் குறையும் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவது ஒன்றும் புதியதல்ல. இதே போல் 2013-2014 லும் திரும்பப் பெறப்பட்டது. 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம், 2005 ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அத்தனை ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது என ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்