ரூ.2000 நோட்டு திரும்ப பெற இது தான் காரணம்.. ரிசர்வ் வங்கி விளக்கம்

May 20, 2023,09:30 AM IST

டெல்லி :  ரூ. 2000 நோட்டு ஏன் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.

2016 ம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று மாலை அறிவித்தது. தற்போதுள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அதில், இந்திய டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஆண்டு அறிக்கையின் படி யூபிஐ பணபரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. யூபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார், மொபைல், பிரிபெய்டு கார்டுகள் வழியாக 2022 ம் ஆண்டு மட்டும் ரூ.14 .92 லட்சம் கோடி மதிப்பிலான 87.92 பில்லியன் பணபரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதனால் ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது.



clean note policy அடிப்படையில் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு உயர் தரத்திலான ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ரூ.2000 நோட்டுக்கள் 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டவையாகும். அதன் வாழ்நாள் காலமான 4 முதல் 5 ஆண்டுகளை எட்டி விட்டதால் அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளிவிபரத்தின் படி ரூ.6.73 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இவை தற்போது பாதியாக குறைந்து விட்டன. 2023 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளி விபர கணக்கின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே, அதாவது 10.8 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இப்படி புழக்கத்தில் குறையும் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவது ஒன்றும் புதியதல்ல. இதே போல் 2013-2014 லும் திரும்பப் பெறப்பட்டது. 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம், 2005 ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அத்தனை ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது என ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்