ரூ.2000 நோட்டு திரும்ப பெற இது தான் காரணம்.. ரிசர்வ் வங்கி விளக்கம்

May 20, 2023,09:30 AM IST

டெல்லி :  ரூ. 2000 நோட்டு ஏன் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.

2016 ம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று மாலை அறிவித்தது. தற்போதுள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அதில், இந்திய டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஆண்டு அறிக்கையின் படி யூபிஐ பணபரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. யூபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார், மொபைல், பிரிபெய்டு கார்டுகள் வழியாக 2022 ம் ஆண்டு மட்டும் ரூ.14 .92 லட்சம் கோடி மதிப்பிலான 87.92 பில்லியன் பணபரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதனால் ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது.



clean note policy அடிப்படையில் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு உயர் தரத்திலான ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ரூ.2000 நோட்டுக்கள் 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டவையாகும். அதன் வாழ்நாள் காலமான 4 முதல் 5 ஆண்டுகளை எட்டி விட்டதால் அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளிவிபரத்தின் படி ரூ.6.73 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இவை தற்போது பாதியாக குறைந்து விட்டன. 2023 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளி விபர கணக்கின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே, அதாவது 10.8 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இப்படி புழக்கத்தில் குறையும் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவது ஒன்றும் புதியதல்ல. இதே போல் 2013-2014 லும் திரும்பப் பெறப்பட்டது. 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம், 2005 ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அத்தனை ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது என ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்