ரூ.2000 நோட்டு வாபஸ்... இதுவரை எவ்வளவு ரூபாய் திரும்ப வந்திருக்கு?

Jul 05, 2023,10:28 AM IST
டெல்லி :  ரூ. 2000 நோட்டு எவ்வளவு திரும்ப வந்துள்ளது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

உயர் பண மதிப்பு கொண்ட ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக இந்த ஆண்டு மே 19 ம் தேதியன்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. தடை செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ம் தேதி வரை காலக் கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்ட மே 19 ம் தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை ரூ.2.72 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வங்கிக்கு வப்துள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆர்பிஐ வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கின் படி ஜூன் 30 ம் தேதி கணக்கின் படி ரூ.0.84 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளது.

அதாவது 76 சதவீதம் அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மார்ச் 31 ம் தேதி கணக்கின் படி 3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. மே 19 கணக்கீட்டின் இது ரூ.3.56 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 

பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தின் படி, இதுவரை திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுக்களில் 87 சதவீதம் நோட்டுக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 13 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்