டில்லி : ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த 20 நாட்களுக்கு உள்ளாகவே புழக்கத்தில் இருந்த 50 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மே 19 ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ விளக்கம் அளித்தது. செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை குறித்து சக்திசந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு 85 சதவீதம் நோட்டுக்கள் வங்கி சேமிப்பிற்கு திரும்ப வந்துள்ளன. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பணம் திரும்ப வந்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை ரூ.3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.
கடைசி நிமிட கூட்ட நெரிசலை தவிர்க்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுக்கள் உள்ளன என்றும் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}