டில்லி : ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த 20 நாட்களுக்கு உள்ளாகவே புழக்கத்தில் இருந்த 50 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மே 19 ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ விளக்கம் அளித்தது. செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை குறித்து சக்திசந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு 85 சதவீதம் நோட்டுக்கள் வங்கி சேமிப்பிற்கு திரும்ப வந்துள்ளன. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பணம் திரும்ப வந்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை ரூ.3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.
கடைசி நிமிட கூட்ட நெரிசலை தவிர்க்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுக்கள் உள்ளன என்றும் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}