டில்லி : ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த 20 நாட்களுக்கு உள்ளாகவே புழக்கத்தில் இருந்த 50 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மே 19 ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ விளக்கம் அளித்தது. செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை குறித்து சக்திசந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு 85 சதவீதம் நோட்டுக்கள் வங்கி சேமிப்பிற்கு திரும்ப வந்துள்ளன. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பணம் திரும்ப வந்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை ரூ.3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.
கடைசி நிமிட கூட்ட நெரிசலை தவிர்க்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுக்கள் உள்ளன என்றும் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}