டில்லி : ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த 20 நாட்களுக்கு உள்ளாகவே புழக்கத்தில் இருந்த 50 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மே 19 ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ விளக்கம் அளித்தது. செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை குறித்து சக்திசந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு 85 சதவீதம் நோட்டுக்கள் வங்கி சேமிப்பிற்கு திரும்ப வந்துள்ளன. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பணம் திரும்ப வந்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை ரூ.3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.
கடைசி நிமிட கூட்ட நெரிசலை தவிர்க்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுக்கள் உள்ளன என்றும் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}