டெல்லி : ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு 2023 ம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் பயன்படுத்துவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் எனவும் ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பின் போது ரூ.500, 1000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. அதற்கு பிறகு, அதற்கு மாற்றாக ரூ.2000 நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. புதிய 500 ரூபாயும் அறிமுகமானது. 2016 ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் சில ஆண்டுகளாக இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது. யாரிடமும் 2000 ரூபாய் நோட்டு இல்லை. வங்கிகளும் அதை விநியோகிப்பதில்லை. இதனால் மக்கள் குழப்பமடைந்தனர். அப்போதுதான் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதையே ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்று தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த நோட்டை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. க்ளீன் நோட் பாலிசி அடிப்படையில் இந்த 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுக்களை கைகளில் வைத்திருப்போர் தங்களின் வங்கிகளுக்கு சென்று தங்களின் கணக்கில் சேமித்து கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். வங்கிகளின் வழக்கமான வேலைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ.20,000 வரையிலான தொகையை மே 23 ம் தேதி முதல் வங்கியின் வேலை நேரத்தின் போது நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் பார்லிமென்ட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த தகவலின் படி, 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை ரூ.9.512 லட்சம் அளவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ரூ.27.057 லட்சம் கோடி ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}