Yellow Alert: தண்ணீரில் மிதக்கும் பெங்களுரு.. இன்னும் 6 நாட்களுக்கு மழை இருக்காம்

May 23, 2023,11:43 AM IST
பெங்களுரு : பெங்களுருவில் பெய்து வரும் தொடர் மழையால் நகரமே நீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களுருவிற்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

பெங்களுருவில் ஞாயிற்றுக்கிழமை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்தில் கார் சிக்கிக் கொண்டதால் 22 வயது ஐடி பெண் ஊழியர் உயிரிழந்துள்ளார். பல இடங்களில் மரங்கள் வேருடன் பிடுங்கி எரியப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.



இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெங்களுருவில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை தொடரும். மே 27 வரை மழை தொடரும். வங்கக் கடலில் உருவாகி உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதனால் மழை அளவு அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி வரும் மழையை எதிர்கொள்ள மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டும். தேடையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்கள் வீடுகளுக்குள்ளே தங்கி இருக்கவும், கனமழை பெய்யும் போது வாகனங்கள் ஓட்ட வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. சாலைகளில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளதால் மக்கள் கவனமுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடந்த சில நாட்களாக 30 டிகிரி செல்சியசிற்கும் மேலாக அதிகரித்து வந்த வெப்பநிலைக்கு நிவாரணமாக இந்த மழை இருக்கும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில், இப்படி ஒரு பேய் மழை பெய்து வருவதால் பொது மக்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்