சட்டென்று மாறிய வானிலை.. 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!

May 21, 2023,10:51 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் உச்சத்தில் இருக்கிறது. வெயில் வெளுத்தெடுப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் வெயில் உக்கிரமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. கடற் காற்று நகருக்குள் வீசி வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.




இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது. இதனால் சென்னை நகரிலும் சற்று வெயில் தணிந்து லேசான காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசான மேகமூட்டத்துடன் வானம் காணப்படும். வெயில் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்